கால்பந்து வீராங்கனை வீட்டில் அண்ணாமலை ! சற்றுமுன் முக்கிய பதிவு

சற்றுமுன் அண்ணாமலையின் பரபரப்பு டிவிட்டர் பதிவு இதோ :- அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா அவர்களின் பெற்றோர்களை இன்று சந்தித்து பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டோம்.
சகோதரி பிரியா அவர்களின் நினைவு என்றென்றும் நம்முடன் இருக்கவும் தமிழக கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கவும், கால்பந்து வீரர் ராமன் விஜயன் அவர்களுடன் இணைந்து பாஜக மாபெரும் கால்பந்து போட்டியை நடத்தவிருக்கிறது.
மேலும், சகோதரி பிரியா அவர்களின் பெயரில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளை உருவாக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 கால்பந்து வீராங்கனைகளின் அனைத்து பயிற்சி செலவையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்கும்.
முதல்வர் சொந்த தொகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது. இரண்டு கோடி ரூபாய் நிவாரணமாக சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்திற்கு திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும். என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS